மார்க்சிஸ்ட் கட்சியின் சிறப்பு கருத்தரங்கம்
அவிநாசி, ஜூன் 22- வஞ்சிபாளையம் அரசுப்பள்ளி யினை தரம் உயர்த்தக்கோரி, மார்க் சிஸ்ட் கட்சியின் சிறப்பு கருத்தரங்கம் சனியன்று மாலை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றி யம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட் பட்ட வஞ்சிபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியினை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், என வலியுறுத்தி சிறப்பு கருத்தரங்கம் சனியன்று மாலை நடைபெற்றது. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகன் தலைமை வகித்தார். சிபிஎம் வஞ்சிபாளையம் தெற்கு கிளைச் செய லாளர் ஹனிபா வரவேற்றார். ‘பள்ளி தளம் அமைப்போம்’ என்ற தலைப்பில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பின ரும், தமுஎகச மாநிலத் தலைவருமான மதுக்கூர் ராமலிங்கம், மாநில துணைத் தலைவர் ரோகிணி ஆகியோர் கருத் துரையாற்றினர். இதில் சிபிஎம் மாவட் டச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ச.நந்த கோபால், ஆர்.காளியப்பன், ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், வேலுச்சாமி, சண் முகம், தினகரன், தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.