சங்கு ஊதி சிலிண்டருடன் மனு
சேலம், மார்ச் 23- எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சிலிண்டருக்கு மாலை அணிவித்து சங்கு ஊதி ஊர்வலமாக எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர். தமிழகம் முழுவதும் குறிப்பாக சேலம் மாநகரில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் விலை உயர்வு ஏற்பட்டுள்ள தால், அனைத்து தரப்பு பொதுமக்களும் பெரும் சிர மத்திற்குள்ளாகிள்ளனர். இந்நிலையில், ஒன்றிய மோடி அரசு உடனடியாக தலையிட்டு சமையல் எரி வாயு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியு றுத்தி இளைஞர்கள் சிலர் திங்களன்று சிலிண்டிற்கு மாலை அணிவித்து சங்கு ஊதி ஊர்வலமாக எடுத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர்.
