tamilnadu

img

லாரி மோதி இரும்பு ஆர்ச் சேதம்

லாரி மோதி இரும்பு ஆர்ச் சேதம்

கோவை, ஜூன் 19- லங்கா கார்னர் ரயில்வே சுரங்கப்  பாதை இரும்பு ஆர்ச் மீது லாரி மோதிய தில் இரும்பு ஆர்ச் சேதமடைந்து சாலை யில் சாய்ந்தது. கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் சுரங்கப் பாதை மிகவும் தாழ்வாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும் போது சுரங்கப்பாதையில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் சுரங்கப்பாதை யின் முன்னாள் ரயில்வே துறை சார் பில் இரும்பு ஆர்ச் வைக்கப்பட்டது. இருப்பினும் நள்ளிரவு மற்றும் அதி காலை நேரங்களில் வரும் கனரக வாகன ஓட்டிகள் அதனை கவனிக்கா மல் கடக்க முயல்வதால் இரும்பு ஆர்ச்  மீது மோதி விபத்து ஏற்படுகிறது.  இந்நிலையில், புதனன்று இரவு லோடுடன் சென்ற லாரி ஒன்று லங்கா  கார்னர் சுரங்கப்பாதை  இரும்பு ஆர்ச் மீது மோதி சிக்கியது. இதனால் இரும்பு ஆர்ச் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீ சார் மற்றும் ரயில்வே துறையினர் பொக் லைன் இயந்திரம் மூலம் இரும்பு ஆர்ச்சை அகற்றி போக்குவரத்தை சீர்  செய்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், லங்கக்கார்னர் சுரங்கப்பாதை தாழ்வாக இருப்பதால், அங்கு இரும்பு  ஆர்ச் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு  முறையும் இங்கு வைக்கப்படும் இரும்பு ஆர்ச் மீது வாகனங்கள் மோதுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவ தோடு பிற வாகனங்கள் மீதும் விழுகி றது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து இரவு நேரங்களில் தூக்க கலக் கத்தில் வரும் கனரக வாகன ஓட்டிகள் இந்த ஆர்ச் இருப்பது தெரியாமல் விபத் தில் சிக்கிக் கொள்கின்றனர். போக்குவ ரத்து போலீசாரும், ரயில்வே துறையின ரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். எனவே வாகன ஓட்டி கள் எளிமையாக தெரிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க  வேண்டும் அல்லது இரும்பு ஆர்ச்சை வைக்காமல் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.