இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்
கோவை, நவ.26- ஜோலார்பேட்டை- கோவை இடையே வியாழனன்று (இன்று) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற வுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜோலார்பேட்டை - கோவை இடையே இயக்கப்படும் ரயில்களை வேகமாக இயக்க உதவும் வகையில், இந்த வழித்தடத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் ஒரு பகுதியாக ஜோலார்பேட்டை - கோவை இடையே அண்மையில் இரு முறை அதிவேக சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன. இதைய டுத்து, மூன்றாவது முறையாக வியாழனன்று (இன்று) சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே, கோவை - ஜோலார்பேட்டை இடையிலான ரயில் பாதைக ளுக்கு அருகே வசிக்கும் மக்கள் ரயில் பாதைகளை நெருங் கவோ அல்லது அத்துமீறி ரயில் பாதையில் நடக்கவோ கூடாது என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.