தேனியில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு வைக்கப்பட்டதை வரவேற்று தேனியில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை மும்முனை சந்திப்பு பகுதியில் தங்கதமிழ்செல்வன் எம்பி தலைமையில் பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் கே.எஸ் .சரவணக்குமார் ,மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன்,நகர் செயலாளர்கள் நாராயண பாண்டியன், பால முருகன் உள்ளிட்ட திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
