ஜிபிஎஸ் கருவியை பொருத்தி செயலி உருவாக்க
ஆட்டோ தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்
சேலம், ஜூன் 22- ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, தமிழக அரசு செயலி உருவாக்கித் தர வேண்டும், என சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. சிஐடியு சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க 29 ஆவது ஆண்டு பேரவை, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வி.பி.சிந்தன் நினைவகத்தில் ஞாயி றன்று, மாவட்டத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் ஏ.மோகன் ராஜ் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் எஸ். சந்திரன் வரவேற்றார். துணைச் செயலாளர் எஸ்.எம்.வரதராஜ பெருமாள் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் ஏ.கோவிந்தன் துவக்கவுரை யாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.உதயகுமார், மாவட் டப் பொருளாளர் எம்.மகாதேவன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். சாலைப் போக்கு வரத்து சங்க மாவட்டச் செயலா ளர் பி.முருகேசன், சிஐடியு மாவட் டத் தலைவர் டி.உதயகுமார் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், தமிழக அரசே ஜிபிஎஸ் கருவியை பொருத்தி செயலியை உருவாக்கி தர வேண் டும். ஆட்டோ தொழிலை பாது காக்க உயர்நீதிமன்ற தீர்ப்பை விரைந்து அமல்படுத்த வேண்டும். வீடு இல்லாத ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு, வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு வழங்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் ஆட்டோ ஸ்டாண்டுகளை மாவட்ட நிர்வாகம் அமைத்துத்தர வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத் தின் மாவட்டத் தலைவராக எஸ்.கே. தியாகராஜன், செயலாளராக சி. உதயகுமார், பொருளாளராக எம். மகாதேவன் உட்பட 25 மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். முடிவில், ஆட்டோ தொழிலாளர் மாநில பொதுச்செய லாளர் எம்.சிவாஜி நிறைவுரை யாற்றினார்.