tamilnadu

img

ரேசன் கடைக்கு முழுநேரப் பணியாளர் நியமிக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ரேசன் கடைக்கு முழுநேரப் பணியாளர் நியமிக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 19- அனுப்பர்பாளையம் நியாயவிலை கடைக்கு முழுநேரப் பணியாளர் நிய மிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  வரும் திங்கட்கிழமை முதல் முழுநேரப்  பணியாளர் நியமனம் செய்வதாக வளர் மதி கூட்டுறவு சங்க மேலாண் இயக்கு நர் உறுதியளித்தார்.  வேலம்பாளையம் நகரப் பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம், திலகர் நகர், அ.புதூர், சிறுபூலுவபட்டி நியாய  கடைகளில் ஆயிரக்கணக்கான குடும்ப  அட்டைதாரர்கள் உள்ளனர். இங்கு வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே கடைகள்  திறக்கப்படுகிறது. இதனால் பெரும்பா லானோருக்கு பொருட்கள் முழுமை யாக கிடைப்பதில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுப்பர்பாளையம் கிளைகள் சார்பில்  அனுப்பர்பாளையம் நியாய விலை கடை முன்பு வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரக்குழு உறுப் பினர் ஆ.கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். இதில், கடைக்கு முழுநேர பணியாளர் நியமிக்க வேண்டும். தின சரி கடைகளை திறந்து அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும். கடை கள் சரியான நேரத்திற்கு திறப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவுப் பொருட்களை தரமான முறையில் வழங்க வேண்டும். சரியான அளவில்  பாக்கெட்டுகளில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. கட்சியின் நகரச் செயலாளர் ச.நந்த கோபால், நகரக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுகுமார், பி.சின்னச்சாமி, என்.விஸ்வநாதன், மாதர் கிளைச் செயலா ளர் சாந்தி, சிஐடியூ நிர்வாகிகள் அ.ஆறு முகம், என்.குபேந்திரன், தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வளர்மதி கூட்டு றவு சங்க மேலாண்மை இயக்குநர்  புவனேஸ்வரி, நியாய விலை குடும்ப  அட்டைதாரர்கள் சொன்ன குறைக ளைக் கேட்டு, வரும் திங்கட்கிழமை முதல் அனுப்பர்பாளையம் நியாய விலை கடைக்கு முழுநேர பணியாளர்  நியமனம் செய்வதாக உறுதியளித்தார்.