ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிபிஎம் எம்எல்ஏ அடிக்கல்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி, கீழையூர் ஒன்றியம், பாலகுறிச்சி ஊராட்சியில் ஊரக வளர்ச்சிதுறை மூலம் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்துக்கு கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் திமுக ஒன்றியச் செயலாளர் சோ.ப. மலர்வண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள், பொறியாளர் வெற்றிவேல் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
