வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து சிபிஎம் பிரச்சாரம்
திருப்பூர், ஜூன் 22- மக்களின் வாழ்வாதாரக் கோரிக் கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண் டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரச் சாரத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக் கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில் ஈடு பட்டனர். கட்சியின் மடத்துக்குளம் தாலூகாக்குழு சார்பில், காரத்தொழுவு பகுதியில் தொடங்கிய பிரச்சார இயக் கம் கணியூர், மடத்துக்குளம், வேட பட்டி, மைவாடி, நரசிங்காபுரம், நீலம் பூர், பாப்பான்குளம், பெருமாள்புதூர், கொழுமம், கொமரலிங்கம், சங்கரமநல் லூர் உள்ளிட்ட 23 மையங்களில் நடை பெற்றது. முடிவில், ருந்தராபாளையத் தில் தெருமுனை கூட்டம் நடைபெற் றது. இதில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மது சூதணன், தாலூகா செயலாளர் ஆர்.வி. வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று, சிபிஎம் உடுமலை ஒன்றியக்குழு சார்பில், சாலையூர், வல்லக்குண்டாபுரம், தேவனூர்புதூர் ஆகிய பகுதிகளிலிருந்து துவங்கிய பிரச்சாரத்திற்கு, ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் தமிழ்தென்றல், ராஜகோபால் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.குமார், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் உடு மலை நகரக்குழு சார்பில், கணக்கம் பாளையம் பிரைட் பள்ளி அருகே துவங் கிய பிரச்சார நடைபயணம் ஜீவா நகர், எஸ்.வி.புரம், பெரிய கோட்டை பிரிவு, பெரிய கோட்டை, போடிபட்டி வழியாக சென்று எஸ்.வி.புரம் வாய்கால் பாலம் அருகே நிறைவடைந்தது. கிளைச் செயலாளர் சுதாசுப்பிரணியன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங் கம், நகரச் செயலாளர் தண்டபாணி உட் பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் துவங் கிய பிரச்சாரம், வீரகல்புதூர், குஞ் சாண்டியூர், ராமன் நகர், புதுச்சாம் பள்ளி, கருமலைக்கூடல், புதுப்பாளை யம், காந்தி நகர், சின்ன பார்க், கொளத் தூர் சோதனைச்சாவடி, பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் அ.குமார், ஒன்றியச் செயலாளர் எஸ்.வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இதேபோன்று, பெத்தநாயக்கன் பாளையத்திலுள்ள தமிழ்நாடு கிராம வங்கி முன்பிருந்து துவங்கிய பிரச் சாரத்தை ஏ.ராமமூர்த்தி துவக்கி வைத் தார். தொழுவபள்ளி தெரு, பெரிய மாரி யம்மன் கோவில் தெரு, சிங்காரத் தோப்பு, தோட்டக்கரை மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடை பெற்றது. கன்னங்குறிச்சி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தை மூத்த தலை வர் ஆர்.வெங்கடாபதி துவக்கி வைத் தார். இதில் பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியக்குழு சார்பில், வெள்ளலூர் பேரூராட்சியில் நடைபெற்ற பிரச் சாரத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் வி.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராம மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் தினேஷ் ராஜா, ஒன்றியச் செயலாளர் பஞ்சலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். சூளேஸ்வரன்பட்டி நக ரில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு தாலு காக்குழு உறுப்பினர் அங்கமுத்து தலைமை வகித்தார். இதில் தாலுகா செயலாளர் எம்.அன்பரசன் கலந்து கொண்டார். பொள்ளாச்சியில் கிளைச் செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில், பலர் கலந்து கொண்டனர். தொண்டா முத்தூர் ஒன்றியக்குழு சார்பில், நடை பெற்ற இருசக்கர வாகன பிரச்சாரத் திற்கு, ஒன்றியச் செயலாளர் வி.மணி தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்டப் பொருளாளர் காளப்பன் துவக்கி வைத்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். ஆறுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பெரியநாயக்கன்பாளையம் ஒன் றியக்குழு சார்பில், கூடலூர், வீர பாண்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய் குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர் நா. சிவராஜ், மூத்த தலைவர் வி.பெரு மாள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். நீலகிரி நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதி யில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. வினோத் தலைமை வகித்தார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மனோஜ் குமார், இடைக்கமிட்டி செய லாளர் ஆர்.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அருவங்காடு பாய்ஸ் கம்பெனி, வெலிங்டன் உட்பட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.