மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி 3 ஆவது நாளாக வியாழனன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி னர். இதேபோன்று தருமபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறியல் நடைபெற்றது.
