கோவை எம்.பி. தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, செப்.11- துடியலூர் வாரச்சந்தையின் நடுவே திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி யினர் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி துடியலூ ரில் ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமையன்று வாரச்சந்தை நடை பெற்று வருகிறது. சுமார் 350 வருடங் கள் பழமையான இந்த வாரச் சந்தை யுடன், கால்நடை சந்தையும் செயல் பட்டு வருகின்றது. கோவை மாநக ராட்சி பராமரிப்பில் உள்ள இந்த வார சந்தை மற்றும் கால்நடை சந்தையின் மூலம் வருவாயை ஏற்படுத்தி அத னைக் கொண்டு வாரச்சந்தை பரா மரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவை மாந கராப் பகுதியில் சேகரிக்கும் குப்பை கள், கழிவுகள் திடக்கழிவுகள் ஆகி யவைகளை சந்தையில் கொண்டு வந்து கொட்டி தரம் பிரித்து மேலாண்மை செய்யும் நோக்கத்தில் மாநகராட்சி நிர்வாகம் துடியலூர் சந்தை பகுதியை தேர்வு செய்து அதற்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது.
பாரம்பரியமிக்க ஒரு வார சந்தையில் மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் விவசாயிகள், கால்நடை பண்ணை யாளர்கள், வியாபாரிகள், அரு காமையில் வசிக்கும் பொதுமக்கள், நுகர்வோர்கள் ஆகியோ பாதிப்புக் குள்ளாகும். மேலும், குடியிருப்புகள், மருத்துவ மனைகள், தாய் சேய் நல மையம், பள்ளிக்கூடம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையம், கோயில், மசூதி, தேவாலயங்கள்உள்ள இப்பகுதி யில் திருவிழாக்கள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிற இடமாக உள்ளது. இப்பகுதி யில் கோவைமாநகராட்சி திடக் கழிவு மேலாண்மை மையம் அமைத் தால் சுகாதார சீர்கேடு நிலவும், அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும் என பொதுமக்கள் மற்றும் அரசி யல் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் இது குறித்து எந்த பரிசீலனையும் மேற் கொள்ளாத கோவை மாநகராட்சி தொடர்ந்து இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் செவ்வாயன்று துடியலூர் பேருந்து நிறுத்தம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்து பேசு கையில், உள்ளாட்சி தேர்தல் நடை பெறாமல், கோவை மாநகராட்சி மாமன்றம் அமைப்பு இல்லாத நிலையில் சிறப்பு அரசு அலுவலர் மாநகராட்சியை நிர்வகித்து வரு கிறார். இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் நிர்வாகத்தில் இல்லாத நிலை யில் மாநகராட்சி நிர்வாகம் வாரச் சந்தையில் குப்பை கழிவுகளை மேலாண்மை செய்யும் இடம் தேர்வு செய்வது குறித்து அரசியல் கட்சி கள், பொதுநல அமைப்புகள், பொது மக்களிடம் கருத்து கூறாமல் மேற் கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது. ஆகவே, கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இத்திட்டத்தை இங்கு செயல்படுத்துவதை கைவிட்டு மாற்று இடம் தேர்வு செய்து அங்கு இத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இது தொடர்பாக சட்டரீதியான நடவ டிக்கைக்கு செல்வதற்கும் தாங்கள் தயாராக உள்ளதாக அவர் தெரி வித்தார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், சி.சிவசாமி, காங்கிரஸ் கட்சியின் பச்சை முத்து, டி.பி.சுப் பிரமணியம், வெ.நா.பழனியப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக் கன்பாளைய ஒன்றிய செயலாளர் என்.பாலமூர்த்தி, மதிமுக செ.சு.சம்பத், கொமதேக வடிவேல் மற்றும் அரவன் திருக்கோவில் நிர்வாகி வி. கே.பழனிச்சாமி, பள்ளிவாசல் தலை வர் ஹபிபுள்ளா, கிறிஸ்துவ சபை யின் நேசப் மனோஜ் உள்ளிட்ட ஏரா ளமானோர் பங்கேற்று மாநக ராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப் பினர்.