காங்கேயம் அருகில் உள்ள வட்டமலை கருமன்றாயன் கோவில் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை அவ்வழியே செல்வோர் கண்டு என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கிறார்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் குடிநீர் வீணாவதை கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உடனடியாக இந்த விரயத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.