tamilnadu

img

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

உடுமலை, டிச. 20- பாஜக அரசின் குடியு ரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி உடுமலையில் அரசு கல் லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர்.  மத்திய அரசின் குடி யுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின் றன. அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநி லங்களில் தொடங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் போராட்டம் பரவியுள் ளது. இந்நிலையில், தன்னிச்சையாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தில்லியில் காவல் துறை கண் மூடித்தன மான தாக்குதலை நடத்தியது.  மக்களை பிளவு படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத் தியும், காவல் துறையின் காட்டுமிராண் டித்தனமான தாக்குதலைக் கண்டித்தும் வெள்ளியன்று உடுமலை அரசு கலை கல் லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டம் காரண மாக கல்லூரியின் முன்பு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பிற்கு நிறுத் தப்பட்டிருந்தனர்.