கோவை, ஆக. 22- கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளித்திட அனைத்து தனியார் மருத்துவமனை கள் கூடுதல் பங்களிப்பினை வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வேண்டுகோள் விடுத் துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகக் கூட்டரங்கில் வெள்ளியன்று இந்திய மருத்துவ சங்கம், தனியார் மருத்துவமனை மருத்துவர்களுட னான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கோவையில் மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக மாற்றம் செய்யப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.
கோவை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத் துவமனை மற்றும் தனியார் பரி சோதனை மையங்களில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் மற் றும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ள வர்களுக்கு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. அதுபோல தனியார் மருத்துவம னைகளிலும், காய்ச்சலுக்கென்று பிரத் யேகமாக வார்டுகள் ஏற்படுத்திட அறி வுறுத்தப்பட்டதன் அடிப்படையில், தனியார் மருத்துவமனைகளில் பிரத் யேக வார்டுகளும், படுக்கை வசதிக ளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தனியார் மருத்துவமனையில் சாதா ரண அறிகுறிகளுடன் உள்ளவர் கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகள் என தனித்தனியாகக் கட் டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நிர்ணயித்த தொகைக் குட்பட்டே கட்டணங்கள் நோயாளிக ளிடமிருந்து பெற வேண்டும். கூடுத லாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மாறாக கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தனியார் மருத்துவம னைகள் கூடுதல் பங்களிப்பினை அளிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.