பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு, வகுப்புவாத கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரிகள் மாற்றுக் கொள்கை முழக்கம்
சேலம், அக். 16 - இந்திய நாட்டையும், மக்களையும் நாசம் செய்யும் மத்திய பாரதிய ஜனதா அரசின் கார்ப்பரேட் ஆதரவு, வகுப்புவாத கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரிக ளின் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றன. மத்தியில் அதிகாரத்தில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையின் காரணமாக இந்திய நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. வேலை யின்மை, தொழில் நசிவு, விவசாயிகள் தற்கொலை என நாளுக்குநாள் நெருக்கடி அதிகமாகிக் கொண்டு வருகிறது. இதனை யடுத்து நாடு முழுவதும் கண்டன இயக் கங்களை நடத்த இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதன்படி, ரிசர்வ் வங்கியில் எடுத்த ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்திட வேண்டும். வேலையில்லா இளைஞர்க ளுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஊதி யம் ரூ.18 ஆயிரம் என்பதை உத்தரவா தம் செய்திடுக. ராணுவ தளவாட தொழிற் சாலைகள், ரயில்வே, பிஸ்என்எல், ஏர் இந்தியா நிறுவனங்களை தனியார்மயப்ப டுத்தும் நடவடிக்கையை கைவிடு என்பன உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து புதனன்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐ மாவட்ட செயலாளர் எ.மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் கோ.மோகன சுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப் பினர் எஸ்.கண்ணன், சிபிஎம் மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கண் டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட் டத்தில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்) கட்சி முன்னணி ஊழியர்கள் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை சிவானந்தா காலணி பவர் ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.கருணாக ரன், சிபிஐ சார்பில் மாவட்ட துணை செயலா ளர் சிவசாமி, தங்கவேல் ஆகியோர் உரை யாற்றினர். இதில் இடதுசாரி கட்சிகளை சார்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பூர்
திருப்பூர் தியாகி குமரன் சிலை முன்பாக புதன்கிழமை மாலை கொட்டும் மழைக்கு இடையே இடதுசாரிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் சிறப்புரை ஆற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ரவிச்சந்தி ரன் உள்பட இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், குன்னூர் வி.பி.தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இப்ரா ஹிம் தலைமை வகித்தார். எல்ஐசி ஊழியர் சங்கத்தின் குன்னூர் கோட்ட செயலாளர் இளங்கோவன் துவக்கி வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பெள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, தாலுகா குழு உறுப்பினர் பொ. இராமன் குட்டி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் ஏ.குமார் தலைமை வகித் தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன், மாவட்ட துணைச் செயலாளர் காசி, தமிழ் குமரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (எம் எல்) மாவட்டக்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
நாமக்கல்
நாமக்கல் பூங்கா சாலை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர். குழந்தான் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா கண்டன உரை யாற்றினார். இதில், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் நா. பெரியசாமி, மாநில கட் டுப்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.மணி வேல், சிபிஎம் நாமக்கல் மாவட்ட செயலா ளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ரங்கசாமி, ந.வேலு சாமி, கே.தங்கமணி, சு.சுரேஷ், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டி.முத்துசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், டி.என்.கிருஷ்ணசாமி, க.அன்புமணி, எஸ்.மணிமாறன், ஆர்.செங்கோட்டையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.