tamilnadu

img

குடிபோதையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர்

பொதுமக்கள் சுற்றிவளைத்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

கோவை, செப்.11– குடிபோதையில் இருந்த காவ லர் ஒருவர் பெண்ணிடம் பாலி யல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் செவ்வா யன்று மாலை கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அத்திப் பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை தாண்டும்போது சீருடையில் இருந்த பிரபாகரன் என்கிற காவலர் ஒருவர் அப் பெண்ணை பின்தொடர்ந்து வந் துள்ளார். இதனால் அச்சமடைந்த அப்பெண் தனது இருசக்கர வாக னத்தை வேகமாக இயக்கியுள்ளார்.  ஆனால், அப்பெண்ணை விடா மல் விரட்டிய காவலர் பிரபாகரன், அவரை வழிமறித்து அப்பெண்ணி டம் பாலியல் ரீதியாக அநாகரி கமான வார்த்தையில் பேசியுள் ளார். இதனால் அச்சமடைந்த அப்பெண், தனது உறவினர்களை பார்க்க சென்று கொண்டிருப்ப தாக கூறி அவரிடமிருந்து தப்பி யுள்ளார். இருப்பினும் விடாமல் பின்தொடர்ந்து வந்த காவலரின் செயலால் பீதியடைந்த அப் பெண் அத்திப்பாளையம் பகுதி யிலுள்ள ஒரு கடையின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் ஓடி ஒளிந்துள்ளார். அங்கும் வந்த காவலர் பிரபாகரன் தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணை வெளியே வரச் சொல்லியுள்ளார். இதனையடுத்து அப்பெண் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதற்குள் அங்குள்ள பொதுமக் கள் கூடி அநாகரிகமாக நடந்து கொண்ட காவலர் பிரபாகரனை  சுற்றி வளைத்தனர். ஆனால் குடிபோதையில் இருந்த காவலர் தனது அதிகார போதையோடு அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை மடக்கிபிடித்து கோவில் பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட காவலர் பிரபா கரன் பணியிடைநீக்கம் செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை வட் டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆனால் இவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். காவலர் ஒருவரே குடிபோதையில் பெண் ணிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.