கோவை, ஜூலை 13– கேரள மாநிலத்தின் முன்னணி நாளிதழான தேசாபிமானி நாளிதழின் கோவை செய்திப் பிரிவு அலுவலகத் திறப்பு விழா இன்று(ஞாயிறு) கோவையில் நடைபெறு கிறது. கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடாக தேசாபிமானி திகழ்கிறது. மலையாள மக்களின் பேராதரவோடு பத்து பதிப்புகள் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி வருகிறது. மலையாள மக்கள் அதிகம் வாழும் கோவையில் தேசாபிமானியின் வாசகர் கள் அதிகம் உள்ளனர். இதனையடுத்து தேசாபிமானியின் கோவை செய்திப் பிரி விற்கென அலுவலகம் துவக்குவது என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், இப்புதிய செய்தி பிரிவின் துவக்கவிழா ஞாயிறன்று கோவை காந்திபுரம் 100அடி ரோடு, 6ஆவது வீதியில் உள்ள சிஎம்எஸ் ஹாலில் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு துவங்கும் இந் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் புதிய அலுவலகத்தை தொடங்கி வைத்து உரை யாற்றுகிறார். மேலும், ஆர்ய வைத்திய பார்மசி யின் இயக்குநர் பி.ஆர்.கிருஷ்ணகுமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, தேசாபிமானி நாளிதழின் பொது மேலாளர் கே.ஜே.தாமஸ், செய்தி பிரிவு பொறுப்பாசிரியர், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பி.ராஜீவ், தீக்கதிர் நாளிதழ் கோவை பதிப்பு பொது மேலா ளர் எஸ்.ஏ.மாணிக்கம் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்கின்றனர்.