சேலம், செப். 26- சேலத்தை அடுத்த காக் காபாளையத்தில் பெண் களை பாலியல் வன் கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்த ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகேயுள்ள காக் காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரின் ஆட்டோவில் பயணித்த பெண் ஒருவர், மோகன்ராஜ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து மோகன்ராஜிடம் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத் துள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல் போனில், மோகன்ராஜ் 7 பெண்களை பலவந்தமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ காட்சிகள் பதி வாகி இருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சிய டைந்தனர். மேலும், ஆட்டோவில் தனியாக வரும் பெண் களை நயவஞ்சகமாக தனது வீட்டிற்கு அழைத்து சென்று, அங்கு அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தான் விரும்பிய நேரத்தில் அந்த பெண்களை பாலியல் வன் கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மோகன் ராஜை புதனன்று கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.