கடலூர், ஆக.11- விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருளைக் குறிச்சி கிராமத்தில் தரமற்ற சாலை போடப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் போதே ஜல்லி பெயர்ந்து வந்தது. இதனைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தரமற்ற சாலை போட்டதற்கு கண்டம் தெரிவித்து போராட்டம் நடத்த இருந்தனர். இது பற்றி அறிந்த பொறியாளர் உடனே சங்கத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். தரமான சாலை அமைக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.