tamilnadu

img

அரசுப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

ஈரோடு, நவ.11- சத்தியமங்கலம் வட்டம், சிக்கரசம் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு கூடுதல் எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட் டம், சிக்கரசம்பாளையம் அரசு தொடக் கப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 1 ஆம்  வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 158  மாணவ, மாணவிகள் பயின்று வருகின்ற னர். அரசு விதிமுறையின்படி இந்த தொடக் கப்பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் 2 ஆசிரியர்கள் மட் டுமே உள்ளனர். இதன்காரணமாக  மாணவ,மாணவிகள் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் கூடுதலாக 3 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் பள்ளி மாணவ, மாணவிகள் மனு அளித்தனர்.