tamilnadu

img

மயானத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை

உதகை, நவ.17- குன்னூர் அருகே மயானத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளர். நீவகிரி மாவட்டம், குன்னூர் பாலகொலா ஊராட்சிக்கு உட் பட்ட பகுதி தேவர்சோலை, தேவர் சோலை எஸ்டேட், தேவர்சோலை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற் பட்ட பொதுமக்கள் வசிக்கின்ற னர். இப்பகுதியில்  இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அருகிலுள்ள இடுகாட்டை பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலை யில் சமீபத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் இடு காட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதியில் வசிக்கும் 80 வயதான மூதாட்டி ஒருவர் கூறுகையில், குடியிருக்க வீடு கேட்டால் தான் ஆட்சியா ளர்கள் தருவதில்லை, இடுகாட் டிற்காவது இடம் கொடுங்களேன் என்று ஆதங்கத்தோடு தெரிவித் தார். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இடுகாட்டை சீர மைத்து தருமாறு இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதேபோல், தேவர்சோலை பஜார் அருகில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகளை அப்புறபடுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும், இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே குப்பைத்தொட்டியை தினந் தோறும் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.