சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வலியுறுத்தல்
தருமபுரி, டிச.20- மனித வள குறியீட்டை மேம் படுத்துவதற்கு அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டுமென சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் செய்தி யாளர்களிடம் கூறினார். இதுதொடர்பாக தருமபுரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பில் அவர் மேலும் கூறியதாவது, ஒரு லட்சத்து 50 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள் 57 ஆயிரம் மையங் களில் பணியாற்றுகின்றனர். மனித வள குறியீட்டில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்றால் அதற்கு அங்கன்வாடி ஊழியர்கள் தான் காரணம். இந்த ஊழியர் களால் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் பராமரிப்பு உள்ளிட்ட மனிதவளம் மேம்பட்டு உள்ளது. இப்பணியில் ஈடுபடும் அங்கன்வாடி உதவி யாளருக்கு ரூ.4500, ஊழியர் களுக்கு ரூ.7700 ஊதியமாக வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ரூ.15 ஆயிரம் என மிக மோசமான குறை வான சம்பளத்தையே அரசு வழங்கி வருகிறது. மேலும் திட்டப்பணி என்ற பெயரில் உழைப்பு சுரண்டப்படு கிறது. இவர்களை அரசு ஊழிய ராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகாலம் பணி முடித்தவர்களை கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு காலிப் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் துவங்கப்படுகிறது. எனவே அங்கன் வாடி பணியாளர்களையே ஆசிரி யர்களாக நியமிக்க வேண்டும். உதவியாளர்களுக்கு ரூ.18 ஆயிரம், பணியாளர்களுக்கு ரூ.21 ஆயிரம் என குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். மேலும், 6 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட் டுள்ளன. இதில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வேலை யிழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை யிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இதனை வலியு றுத்தியும், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக்கூடாது. குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8ஆம் தேதியன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஜனவரி 23ஆம் முதல் 27ஆம் தேதி வரை சிஐடியு அகில இந்திய மாநாடு நடை பெறுகிறது. இம்மாநாட்டில் தொழி லாளர்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மதம் என்ற பெயரால் மக்களை பிரிக்க பார்க்கின்றனர். மதத்தின் பெயரால் குடியுரிமையை பிரிக்கக் கூடாது என சட்டம் சொல்கிறது. பிளவுவாத அரசியலை மத்திய அரசு செய்துவருகிறது. இதேபோல், தமிழக அரசு சில மாவட்டங்களில் ஊராட்சிகள் வரையறுக்கப் படாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்து கிறது. இதை எதிர்த்துத்தான் நீதி மன்றம் செல்கிறார்கள். தமிழ கத்தில் கடந்த காலங்களில் ஒரே கட்டமாகத்தான் உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. ஆனால் தற் போது ஊராட்சிக்கு இரண்டு கட்டங்களாகவும், நகர்ப்பகுதிக்கு ஒருகட்டமாகவும் தேர்தல் நடை பெற உள்ளது. இம்முடிவு அதிமுக அரசின் உள்நோக்கமானது. ஜன நாயக முறையில் தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அ.சவுந்தரராசன் கூறினார். இந்த பேட்டியின் போது அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.டெய்சி, சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதிசிட்டிபாபு ஆகியோர் உடனி ருந்தனர்.