சென்னை,டிச.15- தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28 அன்று தொடங்கி ஜூலை 20 வரை நடைபெற்றது. துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு சட்ட மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன. 6 மாதத்திற்குள் சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதால் ஜனவரி 19 ஆம் தேதிக்குள் சட்ட மன்றத்தை கூட்ட வேண்டும். அந்த வகையில் பொங்கலுக்கு முன்பாக சட்டமன்றக் கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.