திருப்பூர், அக். 22 – தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்க ளுக்குப் பதிவு பெற்ற முதல் மூன்றாண்டு களுக்கு மாதம் ரூ.5000 வீதம் உதவித் தொகை வழங்க வேண்டும். நீதிமன்ற அதி காரத்தை நிர்வாகத்திற்கு கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாயன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டத் தலைவர் பி.மோகன் தலைமை வகித்தார். இதில் இளம் வழக்கறிஞர்களுக்கு கேரளம், ஆந்திர மாநிலங்களில் ரூ.5000 வீதமும், புதுச்சேரி யில் ரூ.3 ஆயிரம் வீதமும், கர்நாடகத்தில் ரூ.2 ஆயிரம் வீதமும் மாத உதவித் தொகை வழங்கி வருவதைக்குறிப்பிட்டு, கோரிக்கை பதாகைகளை உயர்த்திப் பிடித்து வழக்க றிஞர்கள் முழக்கங்கள் எழுப்பினர். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத் தின் மத்தியக்குழு உறுப்பினர் அ.மண வாளன், மாவட்டச் செயலாளர் எஸ்.பொன் ராம் ஆகியோர் உரையாற்றினர். வழக்கறி ஞர் சங்க மாநகரத் தலைவர் ஓ.உதயசூரி யன், செயலாளர் அமர்நாத், பொருளாளர் வினோத் உள்பட மூத்த வழக்கறிஞர்களு டன், இளம் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக மாநகரத் துணை தலைவர் கௌரி நன்றி கூறினார்.