சேலம், பிப். 3- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் 45 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாகவும் திட்டமிட்டப்படி ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடையும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசு இணைய வழிக் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர மக்க ளின் வாழ்க்கை முறை, உள்கட்டமைப்பு, சட்டம் - ஒழுங்கு, மாசுக் கட்டுப்பாடு, போக்குவரத்து மற்றும் பிற வசதிகளின் நிலை எப்படி உள்ளது என்பதை சிட்டிசன் பீட்பேக் என்ற இணையதள முகவரி மூல மாக பொதுமக்கள் பதிவு செய்யலாம் என சேலம் மாந கராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்பில் கல்லூரி மாணவர்கள் செல்போன் செயலி மூலம் பதிவு செய் யும் நிகழ்வு சேலம் சின்னத்திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிறகு மாநகராட்சி ஆணையா ளர் சதீஷ் தெரிவித்ததாவது, ஸ்மார்ட் சிட்டி திட்டத் தின் கீழ் மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பில் சேலம் மாநகர மக்கள் பதிவு செய்ய வேண்டும். மேலும், சேலம் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தற் போது 45 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கான 2022 ஆம் ஆண்டிற்கு 1 ஆண்டு முன்னதாகவே 100 சதவிகித திட்டப்பணிகள் முடிவடையும் என தெரி வித்தார்.