கே.சுப்பராயன் எம்.பி. குற்றச்சாட்டு
திருப்பூர், நவ. 7 – திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் முறைகேடு நடைபெற்றிருப்ப தாகவும், இது பற்றி மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் கே.சுப்பராயன் எம்.பி. கூறினார். திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தின் கீழ் திருப்பூர் மாநகரில் பூ மார்க் கெட், பழைய பேருந்து நிலையம் முன் புறம் உள்ள தினசரி மார்க்கெட், பழைய பேருந்து நிலையம் ஆகிய வற்றை இடித்து புதிதாக கட்டிடங் கள் கட்டப்பட உள்ளது. இதற்காக மார்க்கெட் மற்றும் பேருந்து நிலை யத்தில் கடைகள் அமைத்துள்ளவர் களை வேறு இடத்துக்கு மாற்றுவதற் கான ஏற்பாட்டை மாநகராட்சி நிர்வா கம் தீவிரப்படுத்தி உள்ளது. இதில் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வந்தவர்களாக இருக்கும் கடை உரி மையாளர்களைக் காலி செய்வதில் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், திருப்பூர் தொகுதி எம்.பி.சுப்பராயன் பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட் மற்றும் பழைய பேருந்து நிலையப் பகுதிக்குச் சென்று அங்குள்ள வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் கே.சுப்பராயன் பேசும் போது, ‘பூ மார்க்கெட், தினசரி மார்க் கெட்டில் தற்போது கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு டோக்கன் வழங்க வேண்டும். புதிதாக மார்க்கெட் கடை கள் கட்டிய பிறகு ஏற்கனவே டோக் கன் பெற்றவர்களை முதலில் கடைக ளில் அமர்த்தப்படும் என்ற உத்தர வாதத்தை அதிகாரிகள் அளிக்க வேண் டும். பொங்கல் பண்டிகைக்கு பிறகு பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட் மற் றும் பழைய பேருந்து நிலையத்தை இடிக்க வேண்டும். அதுவரை அங்கேயே கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் வலி யுறுத்தப்படும்’ என்றார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: இது வரை நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல முறைகேடுகள் நடந் துள்ளது என்று மத்திய மந்திரியிடம் புகார் கொடுத்துள்ளேன். இதன் மீது விரிவான விசாரணை நடத்த கமிட்டி அமைக்க வேண்டும் என்று கேட்டுள் ளேன். வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த பிரச்சனையை மத் திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறேன் என்றார்.