tamilnadu

img

சர்வதேச பேரிடர் தணிப்பு தினம்: விழிப்புணர்வு பேரணி

சேலம், அக்.13- சர்வதேச பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு, சேலத்தில் விழிப்புணர்வு பேரணி ஞாயி றன்று நடைபெற்றது.  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சர்வதேச பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்  துறைகளின் சார்பில் பேரிடர் தணிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் தீ விபத்தினை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யினை மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன்  பார்வையிட்டு, தீ தடுப்பு  மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து  துவக்கி வைத்தார். 

பேரணியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது,  சர்வதேச பேரிடர் தணிப்பு தினம்  ஒவ்வொரு ஆண்டும் அக் டோபர் 13ஆம் தேதியன்று கடை பிடிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து சேலம் மாவட் டத்தில் பள்ளி மாணவ, மாணவி யர்கள் பங்கேற்ற பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வு பேரணி,  தீ தடுப்பு மற்றும் விழிப்புணர்வு  முகாம் துவக்கி வைக்கப்பட் டுள்ளது. என தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) (பொ) ஜி.ரவிச் சந்திரன், மாவட்ட முதன்மை  கல்வி அலுவலர் து.கணேஷ் மூர்த்தி, சேலம் வருவாய் கோட் டாட்சியர் மாறன், மாவட்ட தீய ணைப்புத்துறை அலுவலர் விஜய குமார், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பத்மபிரியா, மாவட்ட மேலாளர் (நீதியியல்) சண்முகவள்ளி உட்பட தேசிய  நாட்டு நலப் பணிகள் திட்ட மாண வர்கள், தேசிய மாணவர் படை, மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சாரணர் இயக்கம், தேசிய  பசுமை அமைப்பு, மாணவ, மாண வியர்கள், ஆசிரிய, ஆசிரியை கள் மற்றும் தொடர்புடைய அலுவ லர்கள் கலந்துகொண்டனர்.   

ஏற்காடு

இதேபோல் ஏற்காட்டில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. மேலும்  பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாணவர்கள் கலந்துகொண்ட பேரணி அண்ணா பூங்காவிலிருந்து வட்டாட்சியர் முருகேசன் மற்றும்  ஏற்காடு ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் துவங்கியது. இப் பேரணி ஒண்டிக்கடை, அண்ணா  சிலை, சந்தைப் பேட்டை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று படகு இல்ல ஏரியில் நிறைவுற்றது. அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசு ரங்கள் மக்களுக்கு விநியோகிக் கப்பட்டது. பின்னர் படகு இல்ல ஏரியில்,  தண்ணீரில் தவறி விழுந்தவர் களை எவ்வாறு மீட்பது, அவர் களுக்கு முதலுதவி அளிப்பது மற்றும் கட்டிட இடிபாடுகள் உள்ளிட்ட இடர்களில் சிக்கிய வர்களை எவ்வாறு தூக்கி செல்வது என்பது குறித்து, ஏற்காடு தீயணைப்பு நிலைய  அலுவலர் கணேசன் தலை மையில் தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர். இந்நிகழ்ச்சியை பள்ளி மாணவ, மாணவிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  கண்டு பேரிடர் மீட்பு குறித்து தெரிந்து கொண்டனர்.