அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க கருத்தரங்கில் வலியுறுத்தல்
கோவை, டிச. 19 – அரசுத்துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியி டங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசு பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் கோவையில் வியாழனன்று ஓய்வூ தியர் தின சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. வடகோவை அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்ட பத்தில் ஒருங்கிணைப்புக் குழு வின் மாவட்ட தலைவர் என்.சின்ன சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மாவட்ட செய லாளர் எஸ்.சந்திரன் வரவேற்புரை யாற்றினர். இதில் ஓய்வூதியம் என்கிற தலைப்பில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் துணைத்தலைவர் கே.சுவா மிநாதன், அரசின் அணுகுமுறை குறித்து ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ஏ.பக்கிரிசாமி ஆகி யோர் சிறப்புரையாற்றினார். மேலும், கருத்தரங்கை வாழ்த்தி என்.அரங்கநாதன், எஸ்.கருணா நிதி, வி.வெங்கட்ராமன், சுரேந் திரன், கே.ராமசாமி, சி.வி.மீனாட் சிசுந்தரம் ஆகியோர் உரையாற் றினர். இதன்பின்னர் மூத்தோர் தடகள போட்டியில் தொடர்ந்து பதக்கங்களை குவித்துவரும் பாலாமணிக்கு ஓய்வூதியர் சங்கத் தின் சார்பில் பாராட்டி கௌர விக்கப்பட்டார்.
முன்னதாக, மத்திய அரசின் பொருளாதார நெருக்கடி, தொழி லாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து 2020 ஜனவரி 8 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற் சங்கங்கள் அறைகூவல் விடுத் துள்ளது.இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை அனைத்துதுறை ஓய்வூ தியர் சங்கம் அளிக்கிறது. ஊழி யர்களை வஞ்சிக்கும் புதிய பென் சன் திட்டத்தை கைவிட வேண் டும். மக்களை மதரீதியாக பிளவு படுத்தும் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இதனை கண்டித்து நடைபெறும் சகல பகுதி மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது. நாடு முழுவ தும் வேலைவாய்ப்பற்ற கோடிக் கணக்கான இளைஞர்கள் உள்ள னர். இந்நிலையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்க ளில் லட்சக்கணக்கான காலிப்ப ணியிடங்கள் நிரப்படாமல் உள் ளது. இதனை உடனடியாக நிரப் பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஓய்வூதியர் சிறப்புகருத்தரங் கிற்கு அரசு அனைத்துறை ஓய்வூ தியர் சங்கம், மின்வாரியம்,போக்கு வரத்து, அஞ்சல்,பிஎஸ்என்எல், பள்ளி, கல்லூரி,இன்சூரன்ஸ் உள்ளிட்டதுறைகளின் ஓய்வூ தியர்கள் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். முடிவில் ஓய்வூதியர் ஒருங்கினைப் புகுழுவின் பொருளாளர் ஏ.குடி யரசு நன்றி கூறினார்.