tamilnadu

img

பந்தலூர் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை முகாம்

உதகை, நவ. 25- நீலகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார் பில் பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற் றது. நீலகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், கூட லூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஓய்ஸ் மேன் கிளப் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவா மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து பந்தலூரில் உள்ள அரசு மருத்துவ மனையில்  ஞாயிறன்று கண்சிகிச்சை முகாமை நடத்தினர். இம்முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். கூடலூர் வரு வாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் முகாமினை துவக்கி வைத்தார். உதகை அரசு மருத்துவமனை  மருத்துவர் ராம் குமார் தலைமையிலான கண்  மருத்துவ குழுவினர்   கண் பரிசோதனையை மேற்கொண்டனர். நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட இம்முகாமில் 10 பேருக்கு கண் ணில் புரை கண்டறியப்பட்டது. இவர்கள் அறுவை சிகிச் சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.