tamilnadu

img

பணியிடங்களில் விசாகா கமிட்டியை ஏற்படுத்திக

 சேலம், செப்.6- பணியிடங்களில் விசாகா கமிட்டியை ஏற் படுத்திட வேண்டும் என சேலம் அரசு ஊழியர் சங்கம் மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்ட மகளிர் மாநாடு சேலம் வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் மாவட்ட தலைவர் சி.முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட மகளிர் துணைக் குழு உறுப்பினர் எம்.ராணி வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் வி.தெய்வ ஜோதி அறிக்கையை சமர்பித்து பேசினார்.  மாநில மகளிர் துணைக் குழு அமைப்பாளர் எஸ். தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் இ.கோவிந்த ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இம்மாநாட் டில் மாவட்ட அமைப்பாளராக பி.மனோன்மணி தேர்வு செய்யப்பட்டார். இதில் அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.