tamilnadu

img

கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கோவை, நவ.22- கோவை அரசு மருத்துவ மனையில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.  கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மட்டு மின்றி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலிருந்தும் நாள்தோறும் ஏராள மானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதன்படி நாள் ஒன்றிக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் அரசு மருத்துவ மனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இச்சூழலில் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் வசதி, கழிப் பறை வசதி, நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் வந்து  செல்வதற்கு ஏதுவாக இருப்பிட வசதி, சிகிச்சையில் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது.  இந்நிலையில், வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நேரடியாக ஒவ்வொரு நோயாளியையும், நோயாளியின் உறவினர்களை யும் சந்தித்து குறைகளை கேட்ட றிந்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையின் முதல்வர் மற்றும் தலைமை மருத்துவர்களு டன் ஆலோசனை மேற்கொண் டார்.  கோவை மாவட்ட ஆட்சியரின் இந்த தீடீர் ஆய்வின் காரணமாக அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.