tamilnadu

img

தருமபுரி பேருந்து நிலைய கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்

தருமபுரி, ஜூன் 14- தருமபுரி பேருந்து நிலையத்தில் கழிப்பறையில்  கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தருமபுரி புறநகர் மற்றும் நகரபேருந்து நிலையத்தில் தருமபுரி நகராட்சிக்கு சொந்தமான தலா இரண்டு நவீன கட்டண கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் என 24 மணி நேரமும் இயங்கும் வகையில் குத்தகைதாரர்களுக்கு ஏலம் விடப்பட்டு செயல்படுத்தி வருகின்றனர். இந்தக் கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் கட்ட ணம் நிர்ணயத்துள்ளது. சிறு நீர் கழிக்க ரூ.1 மலம் கழிப்பதற்கு ரூ.3 மற்றும் குளிப்ப தற்கு ரூ.10 என கழிப்பறையின் சுவற்றில்  எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கழிப் பறைக்கு  வரும்  பொதுமக்களுக்கு சிறுநீர் கழிக்க ரூ.5, மலம் கழிக்க ரூ.10 மற்றும் குளிக்க ரூ.20 என அதிகமாகப் பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் அவசரமாக வரக்கூடிய பொதுமக்கள் வேறுவழியின்றி பணத்தை கொடுத்துவிட்டு வருகின்றனர். நிர்ணயித்த கட்டணம் தான் கொடுப் பேன் என கூறும் மக்களிடம் நவீன கழிப் பறையில் உள்ள குத்தகைதாரரின் பணியா ளர்கள் மிரட்டுகின்றனர். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுங்கள் என்று சவால் விடுகின்றனர். வேறு வழி யின்றி பொதுமக்கள் சென்று விடுகின்ற னர். மேலும், பணம்  இல்லாத பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான இலவச சிறுநீர் கழிப்பிடம் உள்ளது. இதனை ஒழுங்காக பராமரிக்கா மல் துர்நாற்றம் விசுகிறது. கூடுதல் கட்ட ணம் வசூலிப்பது குறித்து நகராட்சி நிர் வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் முறை யிட்டும் குத்தகைதாரர்கள் கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதை நிறுத்தவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுதல்கட்டணம் வசூலிப்பது குளித்து தருமபுரி நகராட்சி ஆணையர் மகேஸ் வரியிடம் கேட்டபோது,  நாங்கள் அவ்வப் போது ஆய்வுசெய்கிறோம். மீண்டும் ஆய்வுசெய்வோம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.