அந்தியூர், ஜுலை 25- புதிய கல்விக் கொள்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தவுட்டுப்பாளையம் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், தவுட்டுப்பாளை யம் மார்கெட் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள் கையைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி தலைமை வகித்தார். இதில் அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்ட குழு உறுப் பினர் எஸ்.வி.மாரிமுத்து, தாலுகா கமிட்டி உறுப்பினர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.