கோவை, மார்ச் 2 – கோவையில் கஞ்சா, ஒரு நம்பர் லாட்டரி போன்ற சட்டவிரோத தொழி லில் ஏற்பட்ட மோதலால் இந்து முன்ன ணியினர் 3 பேரை அரிவாளால் வெட் டிய பாஜக இளைஞரணி தலைவர் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலகம் அருகே ஞாயிறன்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கும் காரில் வந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த இந்து முன்னணியை சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட் மற்றும் அவர்க ளது நண்பர் ஹரீஷ் ஆகியோர் காரை ஓட்டி வந்த நபருக்கு ஆதரவாக பேசி யுள்ளனர். இந்நிலையில் இரு சக்கர வாக னத்தில் வந்த பெண் தனது சகோதரர் செல்வா என்பவருக்கு தகவல் தெரி வித்துள்ளார். இவர் பாஜக இளைஞ ரணி தலைவராக உள்ள தனது நண் பர் அசோக் மற்றும் அவரது நண்பர் களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்தின் அருகே பாஜகவை சேர்ந்தவர்களும், இந்து முன்னணியினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் பாஜகவை சேர்ந்த அசோக் தரப்பினர் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் இந்து முன்னணி நிர்வாகி கார்த்திக் மற்றும் ஜெரால்ட், இவர்களின் நண் பர் ஹரீஷ் ஆகிய 3 பேரும் பலத்தக் காயம் அடைந்த நிலையில், பாஜக நிர்வாகி அசோக் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்நிலையில் படுகாயம் அடைந்த 3 பேரையும் காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கஞ்சா விற்பனையில் மோதல்
இதனையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகளை அரிவாளால் தாக்கிய பாஜக இளைஞர் அணி நிர்வாகி அசோக் அவரது கூட்டாளிகள் 6 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் துடிய லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் பின் காவல் துறையினர் தரப்பில் கூறுகையில், மேற்கண்ட இருதரப் பினருக்கும் கஞ்சா, ஒரு நம்பர் லாட் டரி விற்பனை போன்ற சட்டவிரோத தொழில் போட்டிகள் இருந்து வந்தது. மேலும், தங்கள் பகுதியில் யார் முதன்மை என்கிற போட்டியும் அவ் வப்போது நடைபெறும். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் சம்பவம் நடை பெற்றுள்ளது. இருவரும் ஒரே அமைப் பைச் சேர்ந்தவர்கள் என்பதால் சில முக் கிய நிர்வாகிகள் தலையிட்டு வழக்கு போடுவதை தவிர்க்கவைத்து சமரசம் பேசி அனுப்பி வந்தனர். இந்த முன் விரோதம் தான் உச்சகட்டமாக மோதல் சம்பவத்துக்கு காரணமாகி யுள்ளது என்றனர். மேலும், இது தொடர்பாகவும் விசாரணைகள் நடை பெற்று வருவதாகவும், தலைமறை வான குற்றவாளிகளை தேடி வருவ தாகவும் கவல் துறையினர் தெரிவித் தனர்.