tamilnadu

img

சாயமேற்றப்பட்ட கோழி முட்டைகள் பறிமுதல்

கோவை, பிப். 2- கோவை மாநகராட்சிப் பகுதிக ளில் நாட்டுக் கோழிமுட்டை என்ற  பெயரில் விற்கப்பட்ட சாயமேற்றப் பட்ட 3,900  பண்ணைக் கோழி முட்டை களை உணவுப் பாதுகாப்புத் துறையி னர் ஞாயிறன்று பறிமுதல் செய்து அழித்தனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் மீன் மார்க்கெட், லாரி பேட்டை, சிங்காநல்லூர் உழவர் சந்தை, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை,  வடவள்ளி உழவர் சந்தை, மேட்டுப்பா ளையம் சாலை எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணா மார்க்கெட் உள்பட பகுதிகளில் உணவுப் பாது காப்புத் துறையினர் ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது  நாட்டுக்கோழி முட்டை என்ற பெய ரில் சாயமேற்றப்பட்ட பண்ணைக் கோழி முட்டைகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனை யடுத்து சாயமேற்றப்பட்ட முட்டைகள் விற்பனை செய்த 10 பேரிடமிருந்து 3,900 முட்டைகள் பறிமுதல் செய்யப் பட்டு, அழிக்கப்பட்டது. இது தொடர்பாக உணவுப்பாது காப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கு.தமிழ்செல்வன் கூறிய தாவது: நாட்டுக்கோழி முட்டைகள் என்ற பெயரில் சாயமேற்றப்பட்ட பண்ணைக்கோழி முட்டைகள் விற்பனை செய்வது குறித்து கிடைத்த  புகார் அடிப்படையில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் சேலம், நாமக்கல் உள்பட பகுதிகளில் இருந்து  பண்ணைக் கோழி முட்டைகளை வாங்கி வந்து, சாயமேற்றி நாட்டுக் கோழி முட்டைகள் என விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ஞாயிறுதோறும் ரயில் மூலமாக ஒரு பாத்திரத்தில் குறைந்தபட்சம் 500க்கும் மேற்பட்ட முட்டைகளை எடுத்துவந்து விற்பனை செய்துள்ள னர். அவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இது போல் கலப்பட தேயிலைத் தூள், உணவுப் பொருள்கள், உணவு  பொட்டலங்களில் உரிய விவரங்கள் இல்லாமல் இருத்தல், தரமில்லாத உணவுப் பொருள்கள், தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்றும் பதுக்கி வைத் திருத்தல் குறித்து உணவுப் பாதுகாப் புத் துறை 94440 42322 என்ற செல்லி டப்பேசி எண்ணிற்கு கட்செவி அஞ்சல் வழியாக பொது மக்கள் புகார்  தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தார்.