tamilnadu

கோவை மற்றும் பொள்ளாச்சி முக்கிய செய்திகள்

பெண்ணை கொன்றுவருக்கு தூக்கு தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை, செப்.27- பெண்ணை கொலை செய்து  துண்டு, துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்த கோர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  கோவை, அவிநாசி ரோடு, ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில்  குடும்பத்துடன் வசித்து வந்தவர் சரோஜினி (54).  இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று சரோஜா தீடீரென காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த னர். இதற்கிடையே ஒரிரு தினங்கள் கழித்து அவரின் எதிர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே வீட்டை திறந்து பார்த் துள்ளனர். அப்போது, இரண்டு சூட்கேஸ்களில் கை, கால்கள், தொடை, கழுத்து முதல் இடுப்பு வரை என உடல் உறுப்புகள் ஏழு துண்டுகளாக வைக்கப்பட்டிருந்தன. மேலும், துர்நாற்றம் வீசாமல் இருக்க, சூட்கேசை சுற்றியும் சிமென்ட் பூசப்பட்டிருந்தது. இந்த விசாரணையில்,  அந்த வீட்டில், நெல்லை மாவட் டம், மேலப்பாளையத்தை சேர்ந்த, யாசர் அராபத் (29) என்ப வர் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு,  தலைமறைவான  யாசர் அராபத்தை  காவல்துறையினர் தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் லாட்ஜில், தங்கியிருந்த யாசர் அராபத்  கைது செய்யப்பட்டார். இதன்பின் அவரிடம் விசாரித்தபோது, சரோஜா அணிந்திருந்த 12 பவுன் நகைக்காக கொல் லப்பட்டது தெரியவந்தது.  இதுதொடர்பான வழக்கு கோவை 4 ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் வியாழனன்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், இந்த வழக்கை அரித்தினும் அரிதான வழக்காக கருதி கொலை பிரிவிற்கு சாகும் வரை தூக்கிலிடவும், தடயத்தை மறைத்ததற்கும்,  நகைகளை திருடியதற்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும்,  தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கை திறம்பட விசாரித்த வழக்கின் புல னாய்வு அதிகாரிக்கு விருது வழங்கவும் அரசுக்கு பரிந்து ரைப்பதாக தெரிவித்தார்.

உணவில் கலப்படம்: அதிகாரிகள் ஆய்வு செய்ய ஆட்சியா் உத்தரவு

கோவை, செப்.27- கோவை மாநகரில் உணவில் கலப்படம் செய்யும் கடைகள் குறித்து கள ஆய்வு செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளார். உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல் குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கு.ராசா மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தமிழ்ச்செல்வன், அலு வலா்கள் காமராஜ், விஜயேந்திரன், மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை, சமூக நலத் துறை அதிகாரிகள், நுகா்வோர் அமைப்புகளின் சார்பில் கன்ஸ்யூமா் வாய்ஸ் லோகு, இந்திராணி, பாலன், தண்டபாணி, வியாபாரிகள் சங்கம், மளிகை வியாபாரிகள் சங்கம், ஹோட்டல், பேக்கரி உரிமையாளா்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நுகா்வோர் அமைப் பினர் பேசுகையில்,  டீ கடைகளில் கலப்பட தேயிலைத் தூள் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயைக் கொண்டே மீண்டும், மீண்டும் பலகாரங்கள் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு, வியாபாரிகள் பலரும் கலப்பட எண்ணெயைப் பயன் படுத்துகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பீடா என்ற பெயரில் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேசுகையில், மாநகரில் அனைத்து சாலையோரங்களிலும் உள்ள தள்ளுவண்டிக் கடைகள், உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று ஒரே நேரத்தில் திடீா் ஆய்வு நடத்த வேண்டும். உணவு கலப்படம், தேயிலைத் தூள் கலப் படம், எண்ணெய் கலப்படம் குறித்து கள ஆய்வு மேற் கொண்டு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலில்  40 சதவிகிதம் குறுந்தொழில் முனைவோரிடம் பெற்றிடுக

காட்மா சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

கோவை, செப்.27- மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் கொள்முதல் செய்யும் பொருட்க ளில் 40 சதவிகித பொருட்களை குறுந்தொழில் முனைவோர்களி டமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று காட்மா சங்கத் தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. கோயமுத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத் தின் (காட்மா) பொதுக்குழுக் கூட் டம் கோவை கணபதியில் உள்ள  தனியார் மண்டபத்தில் சங்கத்தின் இணை தலைவர் மகேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில், காட்மா சங்கத்தின் முன் னாள் தலைவர் ரவிக்குமார் மற்றும் முன்னாள் செயலாளர் தனபால் ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சங் கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். இதில் புதிய தலைவராக சிவகுமார், பொதுச் செயலாளராக செல்வராஜ், பொரு ளாளராக நடராஜன், துணைத் தலைவர்களாக துரைசாமி, சோம சுந்தரம், செயலாளர்களாக கோல் டன் பாலு, பாலன்,  சுதர்சன்,  சோலை ராஜ், கெளரவ ஆலோசகராக லோக நாதன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.  இதைத்தொடர்ந்து பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு,  ஜாப் ஒர்க்கிற் கான ஜி.எஸ்.டி வரி 18 சதவிகி தத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்படும்  என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இந்த அறிவிப் பினை மீண்டும் மறுபரிசீலனை செய்து வரியை 12 சதவிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும். தொழில்கள் நலிவுற்று இருப்பதால் மத்திய அரசால் அறி விக்கப்பட்ட வங்கி பரிவர்த்தனை கட்டண குறைப்பினை அமல்ப டுத்தி, ரூ.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் பிணையில்லா கடன் வழங்க வேண்டும். மேலும், கடன்களை திருப்பி செலுத்துவதில் கடுமை காட்டாமல் கால அவகாசம் வழங்கி தொழில் முனைவோர்களை பாதுகாக்க வேண்டும். தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலையின் கார ணமாக நலிவுற்றிருக்கும் தொழில்  துறையை சரி செய்ய மத்திய- மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் தாங்கள் கொள் முதல் செய்யும் பொருட்களில் 40 சதவிகித பொருட்களை குறுந்தொ ழில் முனைவோர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்? விசாரணையில் திருப்பம்

கோவை, செப்.27- கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல் லூரி மாணவர்கள் 2 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சந்தேகம் ஏற் பட்டதை தொடர்ந்து சென்னையில் இரண் டாவது நாளாக வெள்ளியன்று விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் முடிவில் மாணவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழு திய புகாரின் பேரில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களின் புகைப்படம் மற்றும் ஆவ ணங்களை மறுஆய்வு செய்ய மருத்துவ பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இந் நிலையில், கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஒரு வரின் புகைப்படமும், தருமபுரியை சேர்ந்த மாணவி ஒருவரின் புகைப்படமும் மாறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் மருத் துவக் கல்லூரி இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்பித்தார். இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வியாழனன்று இருவரும் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். மேலும், மீண்டும் கல்லூரியில் சேர தடையில்லா சான்று பெற்றுவர பிஎஸ்ஜி கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி யது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் இருவரும் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி இயக்குநரகத்தில் ஆஜராகினர். ஆனால், மருத்துவக்கல்லூரி இயக்கு நரும், தேர்வுக்குழு செயலாளரும் அரசு பணி காரணமாக தில்லி சென்றுவிட்டதால் விரிவான விசாரணை நடத்தப்படவில்லை. சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் மட்டும் சரிபார்க்கப்பட்டன. பின்னர் இரண்டாவது நாளாக விசாரணை நடந் தது. அப்போது மாணவர்கள் மீது தவறு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் மருத்துவ படிப்பை தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

குப்பையைத் தரம் பிரித்து வழங்கினால் தங்க நாணயம் பரிசு வால்பாறை நகராட்சி அறிவிப்பு

பொள்ளாச்சி, செப்.27- வால்பாறை நகராட்சி பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பொதுமக்களுக்குத் தங்க நாணயம் பரிசாக வழங்குவது என நகராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் வியாழனன்று ‘தூய்மை இந்தியா’ திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்துக்கு தலைமை வகித்து நகராட்சி ஆணையா் (பொறுப்பு) சரவணபாபு பேசியதாவது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வால்பாறை நகராட்சி மூலம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டு துப்பரவுப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனா். இதேபோல், பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண் மைத் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த பொதுமக்க ளின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. எனவே, பொது மக்களின் ஒத்துழைப்பை பெறும் நோக்கில் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து தொடா்ந்து ஓராண்டு வழங்கும் 10 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனிப்பிரிவு

கோவை, செப்.27- கோவை அரசு மருத்துவமனைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தனிப்பிரிவு ஏற்படுத் தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை காலத்தில் கோவை மாவட்டத்தில் 400க்கும் மேற் பட்டோர் பல்வேறு காய்ச்சலால் பாதிக் கப்பட்டனர். மேலும், இவர்கள் கோவை  அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால்  சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து ஒவ் வொரு கிராமப் புறங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டன.  இந்நிலையில் தற்போது வரை டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலால் மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், குழந்தைகள் பிரிவு, பொது மருத்துவப்பிரிவு, மைக்ரோ  பயாலஜி பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் லேப் ஊழியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடல் நடந்தது. இதனைத்தொடர்ந்து, மருத்துவமனை களில் டெங்கு தனி வார்டு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.  அதன்படி, கோவை அரசு மருத்துவ மனையில் வெவ்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ள்ளது. இந்த வார்டுகளில் கொசுக்கள் நுழையாத வாறு கொசுவலை பொருத்தப்பட்டுள் ளது. டெங்கு அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத் துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.