tamilnadu

img

மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 23 –  மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மோடி அரசின் நடவடிக் கைகளைக் கண்டித்து கோவை யில் அனைத்து மத்திய தொழிற்சங் கங்களின் சார்பில் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மத்திய பாஜக அரசின் 6 ஆண்டுகால மக்கள் விரோத நடவ டிக்கையின் காரணமாக நாடு கடும் பொருளாதார நெருக்கடி யில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொரு ளாதார நெருக்கடி உள்ளிட்ட கார ணங்களால் அனைத்து தரப்பு மக்களும் பெருமளவு பாதிக்கப்பட் டுள்ளனர். இந்த தொழிலாளர் விரோத ஆட்சிக்கு எதிராக ஜன. 8ல் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறை கூவல் விடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வேலை நிறுத்த போராட்டத்தின் கோரிக் கைகளை வலியுறுத்தி திங்களன்று கோவையில் அனைத்து மத்திய  தொழிற்சங்கங்களின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியுசி தலைவர் வி.ஆர்.பாலசுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட் டத்தில் ஐஎன்டியுசி சங்கத்தின் ஜி. சீனிவாசன், கோவை செல்வம், ஏஐடியுசி சங்கத்தின்  முன்னாள் எம் எல்ஏ எம்.ஆறுமுகம், சி.தங்க வேல், எச்எம்எஸ் சங்கத்தின் டி. எஸ்.ராஜாமணி,கா.வீராசாமி, சிஐடியு சங்கத்தின் மாவட்ட தலை வர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆறு முகம்,எல்பிஎஃப் பா.மணி, இளங்கோ, எம்எல்எப் மு.தியாக ராஜன், ஷாஜகான், ஏஐசிசிடியு தாமோதரன், தாமஸ் லூயிஸ், எஸ் டிடியு ரகுபு, ஷாஜகான் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண் டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.