tamilnadu

குட்டையில் மூழ்கி சிறுவர்கள் பலி

கோவை, ஜூலை 2- கோவை, மதுக்கரை குவாரி பேருந்து நிலையம் அருகே உள்ள ஐஎன்டியூசி அலுவலகம் பின்புறம் உள்ள பகுதியில் குடியிருப்பவர் ராஜேந்திரன் கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சிவா (8) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடைய மகன்கள் தினேஷ் (8) மற்றும் கார்த்திக் (8). இச்சிறுவர்கள் மூவரும் திங்களன்று மாலை அப்பகுதியில் உள்ள சூட்டிங் ரேஞ்சில் உள்ள சுமார் 40 அடி ஆழம் உள்ள குட்டையில்  குளிக்கச் சென்ற மூன்று பேரும் தவறி விழுந்து மூன்று பேரும் உயிரி ழந்தனர்.  இக்கல்லுக்குழி ஏசிசி சிமெண்ட்நிறுவனத்திற்குச் சொந்தமானது.  மிகவும் ஆபத்தான மற்றும் ஆழமான கல்லுக்குழிக்கு எவ்வித பாதுகாப்புமின்றியும், தகுந்த எச்ச ரிக்கைப் பலகை வைக்காததுமே சிறுவர்கள் உயி ரிழப்பிற்குக் காரணம் என பெற்றோர்கள் புகார் கூறியுள் ளனர். புகாரின் பேரில் காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 304(ii) ன் கீழ் எசிசி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.