திருப்பூர், ஆக. 3 – திருப்பூரில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் 20 ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இம்மா நாட்டை முன்னிட்டு அறி வியல் சிந்தனையை இளைய தலைமுறையினரி டம் கொண்டு சேர்க்கும் வகையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பிரம்மாண்ட மான கல்வித் திருவிழா நடத்தப்படுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் சனி யன்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாட்டு வரவேற்புக்குழு சார்பில் செய்தி யாளர் சந்திப்பு நடைபெற்றது. வரவேற் புக்குழுத் தலைவர் எஸ்.ராஜகோபால், செய லாளர் ஆ.ஈசுவரன் ஆகியோர் மாநாட்டு நிகழ்வு குறித்து கூறியதாவது: தமிழகத்தில் 1976ஆம் ஆண்டு அறிவி யல் ஆலோசனைகளை முன்வைக்கும் அமைப்பாக அறிவியல் இயக்கம் தொடங் கப்பட்டது. முன்னணி பத்திரிகையாளர் என்.ராம், நீதியரசர் சந்துரு உள்ளிட்டோர் தலைமை வகித்து இந்த அமைப்பை நடத்தியுள்ளனர். இந்த அமைப்பு பிற் பாடு மக்கள் அறிவியல் இயக்கமாக உரு வெடுத்தது. கல்வி, சமூக வளர்ச்சி நோக் கத்துடன் செயல்பட்டு, பள்ளி இடைவில கலைக் குறைக்கும் வகையில் ‘கற்பது கற்கண்டு’ என்ற இயக்கத்தை நடத்தியது. மேலும், தமிழக அரசு நடத்திய அறி வொளி இயக்கத்தை மாநிலம் முழுவதும் பட்டிதொட்டிகளில் கொண்டு சேர்த்ததில் அறிவியல் இயக்கத்தின் பணி சிறப்பு வாய்ந்தது. சூரிய கிரகணம் குறித்து அறி வியல் கண்ணோட்டத்தை ஏற்படுத்தி யதிலும், மக்களின் அறிவியல் மனப்பான் மையை வளர்ப்பதிலும் இந்த அமைப்பு முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த அமைப்பின் மாநில மாநாடு திருப்பூர் அம்மன் கலையரங்கத்தில் ஆகஸ்ட் 9 முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் விஞ்ஞா னிகள் முதல், விவசாயிகள் வரை அறிவி யல் இயக்க செயற்பாட்டாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் பிரதிநிதிகளாகப் பங்கேற் கின்றனர். முன்னதாக இந்த மாநாட்டுச் செய்தியை மக்களிடமும், இளைய தலைமுறையிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் 100 கல்வி நிலையங்களில் மாணவர்களிடம் விஞ் ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய் யப்பட்டு ஜூன் 15ஆம் தேதி தொடங்கியது. இக்கலந்துரையாடல் தற்போது பெரும் பாலான பள்ளிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 30ஆம் தேதி முதல் பொது இடங்களில் அறிவியல் பிரச்சார நிகழ்ச்சிகளாக வான் நோக்கும் நிகழ்ச்சி, அறிவியல் அற்புதங்கள், கலந்துரையாடல், எளிய அறிவியல் பரிசோதனைகள், அறி வியல் கண்காட்சிகள் நடைபெற்று வரு கின்றன.
கல்வித் திருவிழா
இம்மாநாட்டை முன்னிட்டு ஹிரோ ஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீசப் பட்ட கொடிய நிகழ்வின் நினைவு தின மான ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் திருப்பூர் காந்தி நகர் ஏவிபி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாபெரும் கல்வித் திருவிழா நடத்தப்படு கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விதத்தில் இரு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. தினமும் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் சுமார் 1000 மாணவர்கள் பங்கேற்று விஞ்ஞானி களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது தவிர அறிவியல் நிறு வனங்களின் கண்காட்சி, புத்தகக் கண் காட்சியும் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்வு களை அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் ஐந்து நாட்களும் கண்டுகளிக் கலாம்.
மாநாட்டு தொடக்கவிழா
20ஆவது மாநில மாநாட்டை ஆகஸ்ட் 9ஆம் தேதி மதியம் 3 மணிக்கு பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனை வர் பி.குழந்தைவேலு தொடங்கி வைக்கி றார். மாலை 5 மணிக்கு அறிவியலுக்கான ஓர் அணிவகுப்பு என்ற தலைப்பிலான பேரணி சிக்கண்ணா கலை அறிவியல் கல் லூரியில் தொடங்கி, ஓடக்காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரை நடத்தப்படுகிறது. மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் அமைப் பின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று இந்த பேரணியைத் தொடங்கி வைக்கிறார். மாலை 6 மணிக்குப் பொது நிகழ்வுகள் நடைபெறும். பிரதிநிதிகள் மாநாட்டில் சமூகத்திற்குப் பயனளிக்கும் முக்கிய விசயங்களில் தீர்மானங்கள் நிறை வேற்றப்படும். கல்பாக்கம் அணுமின் நிலை யம், பெரியார் அறிவியல் மன்றம், நியூட் ரினோ ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தளங்க ளில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்த மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது வரவேற்புக் குழுப் பொருளாளர் வே.கார்த்திக், அறிவி யல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் வி.ராமமூர்த்தி உள்பட அறிவியல் இயக்க தொண்டர்கள் உடனிருந்தனர்.