கோவை, ஜூன் 20- கோவை தேயிலை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் கிலோவுக்கு ரூ.3.16 முதல் ரூ.3.59 விலை குறைந்துள்ளது. கோவை மேடுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந் தோறும் புதன்கிழமை தேயிலை ஆன் லைன் மூலம் ஏலம் நடைபெறுவது வழக் கம். இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரகர்கள் கலந்து கொண்டு தேயிலையை ஏலம் எடுத்து வருகின்றனர். அதன்படி, தேயிலை வர்த்தக மையத்தில் புதனன்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 415 கிலோ தேயிலை தூள் ஏலத்திற்காக வந்தது. இதில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 173 கிலோ ஏலம் போனது. இது விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் 66 சதவிகிதம் ஆகும். ஏலத்தில் 39 ஏலதாரர் கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ தேயிலை தூள் 100 ரூபாய் 2 காசுகளுக்கு ஏலம் போனது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ 103 ரூபாய் 18 காசுக்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு 3 ரூபாய் 16 காசுகள் விலை குறைந்துள்ளது. மொத்தம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 621க்கு தேயிலை தூள் ஏலம் போனது. இலை ரக தேயிலை ஒரு லட்சத்து 3 ஆயி ரத்து 4 கிலோ ஏலத்திற்கு வந்தது. அதில் 79 ஆயிரத்து 378 கிலோ ஏலம் போனது. இது 77 சதவிகிதம் ஆகும். இதில் 29 ஏல தாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ இலை ரக தேயிலை ரூ.97.27க்கு ஏலம் போனது. கடந்த வாரம் ஒரு கிலோ இலை ரக தேயிலை ரூ.100.86க்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.3.59 காசுகள் விலை குறைந்துள்ளது.