tamilnadu

img

ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி அணை திறப்பு

உடுமலை, செப். 20- அமராவதி அணையிலிருந்து பழைய புதிய ஆயக்கட்டு பாச னத்திற்கு வெள்ளியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. உடுமலை அமராவதி அணை யிலிருந்து பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் திருப்பூர் மற்றும் கரூர் மாவட் டங்களிலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் விவசாயம் வசதி பெறுகிறது. பிரதான கால்வாய் மூலம் 25,250 ஏக்கர் விளை நிலங்களும்,  அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் கல்லா புரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமா தேவி, கணியூர், கடத்தூர், காரத் தொழுவு ஆகிய எட்டு ராஜவாய்க் கால்கள் மூலம் 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகி றது. மேலும் தாராபுரம், அரவக் குறிச்சி, கரூர் தாலுகாவில் 21,867 ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.  இந்நிலையில் பழைய ஆயக் கட்டு பாசனத்திற்காக ஆற்றில் செப்.20 ஆம் தேதி முதல் வரும் ஜனவரி 18வரை 120 நாட்க ளுக்கு, குறிப்பிட்ட இடைவெளி யில் 5054 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள் ளது. புதிய ஆயக்கட்டு பாசனத் திற்கு வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை உரிய இடைவெளி விட்டு 1,711 மில்லியன் கன அடி தண்ணீரும் திறக்கப்பட உள்ளது. தற்போதுள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு மற்றும் பருவ மழையை எதிர்பார்த்து மொத்தம் 6.7 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படுகிறது. மழை பெய்வ தைப் பொருத்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குக் கூடு தல் தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர். முன்னதாக, வெள்ளியன்று நடைபற்ற தண்ணீர் திறப்பு விழாவில் கால்நடை பராமரிப் புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத் துத்துறை அமைச்சர் விஜயபாஸ் கர், துணை சபாநாயகர் பொள் ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் பழனிசாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர். அமராவதி அணையின் தற் போதைய நீர்மட்டம் 90அடியில் 86 அடியாகவும், நீர்வரத்து வினா டிக்கு 285கன அடியாகவும் உள்ளது.