tamilnadu

img

தொழிலாளர் விரோத பட்ஜெட்: சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப். 4 - மத்திய பாரதிய ஜனதா அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு சார்பில் திருப்பூரில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் தியாகி குமரன் நினை வகம் முன்பாக செவ்வாயன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பனியன் தொழிலாளர் சங் கப்பொதுச் செயலாளர் ஜி.சம்பத்  தலைமை ஏற்றார். திருப்பூர் மாவட்ட தலைவர் கே.உன்னிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகளில் ஒருவரான எம்.பாக்கியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர் . முன்னதாக இந்த ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், மத்திய பாரதிய ஜனதா அரசின் மக் கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதில்  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.