தருமபுரி, ஜூலை 24- காதல் திருமணம் செய்த தம்பதியி னருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் தருமபுரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், அத்திமரத்துபள்ளம் கிராமத் தைச்சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் பகலவன் (23). இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு பெங்களூரில் தனியார் நிறு வனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் கிராமத்தின் அருகே உள்ள சீரி யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ்-நாகரத்தினம் தம்பதியினரின் மகள் எம்.செளந்தர்யா(23). இவர்கள் இருவ ரும் கடந்த 5 வருடமாக காதலித்து வந் துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால் அவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள் ளனர். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியன்று பகலவன் - சௌந்தர்யா ஆகியோர் திருப்பூரில் பதிவு திருமணம் செய்துள்ளனர். இத்திரும ணத்தை மறைத்து இருவரும் தங்களது வீட்டுக்கு சென்றுவிட்டனர். இச்சூழலில், செளந்தர்யாவின் பெற்றோர் வேறு நபருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந் ததால் செளந்தர்யாவை பகலவன் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இதனை அறிந்த பகலவனின் தந்தை முனிராஜ் மற்றும் அவரது குடும்பத்தார் உறவினர்கள் செளந்தர்யாவின் குடுமபத் துக்கு தொலைபேசியில் கொலை மிரட் டல் விடுத்துள்ளனர். இதேபோல், காதல் தம்பதியினர் இருவரையும் நேரில் சென்று மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில் காதல் திருமணம் செய்த தம்பதியினர் பகலவன்-செளந்தர் யாவுக்கும், செளந்தர்யாவின் குடும்பத் துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாயன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜனை சந்தித்து மனு அளித்தனர். இம்மனுவினை அளிக்கையில் பகலவன்-செளந்தர்யா தம்பதியினர் மற்றும் மாதர் சங்க மாவட்டசெயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, பொருளாளர் பி.ராஜா மணி, நிர்வாகிகள் கே.சுசிலா, மீனாட்சி, தமிழ்மணி ஆகியோர் உடனி ருந்தனர்.