tamilnadu

img

தென்கொரியா : பாதிப்பு 10,840 பேர்

சியோல், மே 9- கடந்த 24 மணி நேரத்தில் தென்கொரியாவில் 18 பேருக்கு புதிதாக  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தென்கொரிய தலைநகரான சியோலில் மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளப்-களுக்கு சென்றவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் அந்நாட்டு சுகாதாரப் பணியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். தென்கொரியாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும்  முன்னெச்சரிக்கை மையம் சனிக்கிழமை வெளியிட்ட  தகவலின்படி, அந்நாட்டில்  மொத்தம் 10,840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 256 பேர் உயிரிழந்துள்ளனர்.  தென்கொரிய  பிரதமர் சன் சி-யன், நாட்டில் உள்ள அனைத்து  கிளப்கள், பார்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளார்.