tamilnadu

img

குளங்களை தூர்வார சிதம்பரம் மக்கள் நிதி வழங்கலாம்

 சிதம்பரம், ஜூலை 26- சிதம்பரம் நகரில் ஞானப்பிரகாசம் குளம், நாகச்சேரி குளம்,  அண்ணா குளம், தில்லையம்மன் குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டு காணப் படுகின்றன. குளங்கள் வற்றியுள்ள நிலையில், குளங்களில் கிடக்கும்  பிளாஸ்டிக் கழிவுகளை சில தனியார் தொண்டு நிறுவனங் களைச் சேர்ந்தவர்கள் தானாக முன்வந்து அகற்றி வரு கின்றனர்.  இந்நிலையில், நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள  குளங்  களை தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக ஞானப்பிரகாசம் குளத்தை தூர் வாருவ தற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆணையர் சுரேந்தர்  ஷா தலைமையில் நடைபெற்றது.  இதில் நகரின் முக்கியப் பிரமுகர்கள், சமூக ஆர்வ லர்கள், தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள், கோயில்  தீட்சிதர்கள் என அனைவரும் கலந்து கொண்டு குளங்களை  தூர் வாருவது குறித்து ஆலோசனை வழங்கினர்.  தீட்சிதர்கள் சார்பில் முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரம் வழங்கு வதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களி டம் இருந்து உதவிகளைப் பெறும் வகையில் நகராட்சி சார்பில் தனி வங்கிக் கணக்கு ஒன்று தொடங்க உள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் தங்க ளால் முடிந்த பங்களிப்பை செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.