tamilnadu

img

“மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்”

“மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” 

ஜெயங்கொண்டத்தில் நாகை மாலி எம்எல்ஏ

“முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது, அவரை பாராட்டுகின்றோம். அதே சமயத்தில்  வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். மின்சார கட்டணத்தை மாத மாதம்அளவிடுவோம் என்று சொன்னார்கள், அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.  பட்டா பிரச்சனை - குளத்து புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு, கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க இயலாது என்று  கூறுவது தவறு. இதை நீதிமன்றத்தில் போராடி தமிழக அரசு அந்தந்த பகுதி மக்களுக்கு மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும். பாசன வசதி - ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழகங்கம் என்ற பொன்னேரியை தூர்வாரி பாசன வசதி செய்து விவசாயிகளையும் விவசாய தொழிலாளர்களையும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும். குடிநீர் பிரச்சனை - ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 16ஆவது வார்டில் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள் இடிப்பு - நீதிமன்ற தீர்ப்பு நீர்நிலை என்ற பெயரில் பல தலைமுறைகளாக குடியிருந்து கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் ஏழை, எளிய மக்களின் வீடுகளை ஈவு இரக்கமின்றி இடித்து தரைமட்டமாக்கும் போக்கை கைவிட வேண்டும். போக்குவரத்து வசதி - தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் காக்கவும், எரிபொருள் விரயம், நேரவிரயத்தை குறைக்கும் வகையில் துணை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஜெயங்கொண்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா வழங்கல் - யூடிஆர் திருத்தத்தில் ஏற்பட்டுள்ள பிழைகளை களப்பார்வை செய்து உரிய பயனாளிகளின் மன உளைச்சலை போக்கி யூடிஆர் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிபிஎம் மக்கள் சந்திப்பு நடைபயண பிரச்சார இயக்கத்தில்  கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பேசியதில் இருந்து ...