சென்னை, ஜூலை 10- நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாக்கள் நிரா கரிக்கப்பட்ட விஷயத்தில் அமைச் சரின் விளக்கம் திருப்தி அளிக்காததால் திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையி லிருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் புதனன்று(ஜூலை 10) கேள்வி நேரம் முடிந்ததும் ‘நீட்’ தேர்வு மசோதாக்கள் நிராகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்ககாக அனுப்பி வைத்த இரண்டு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. (இதற் கான கடிதத்தை ஆதாரம் காட்டி னார்) இந்த தகவல் மாநில அர சுக்கு தெரிந்தும் கடந்த 19 மாத காலமாக மறைத்ததோடு தமிழக மக்களை ஏமாற்றியுள்ளது” என்றார். இந்த தகவலை மறைத்து மாணவர்களுக்கு பச்சை துரோ கம் செய்த சட்டத்துறை அமைச் சர் சி.வி.சண்முகம் இந்த அவைக்கு தவறான தகவலை அளித்துள்ளார். இதற்கு பொறுப்பேற்று தார்மீக அடிப் படையில் அமைச்சர் பதவியி லிருந்து விலக வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு விளக்கம் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “நீட் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவே தக வல் வந்தது, அதுக்கூட முறைப் படி தெரிவிக்கவில்லை. இது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இது நாள் வரைக்கும் பதில் வரவில்லை. எனவே, நான் கூறியது தவறு என்றால் பதவி விலக தயார்” என்றார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளிக்கை யில்,“ நாம் அனுப்பி வைத்த இரண்டு மசோதாக்களையும் நிறுத்தி வைத்திருப்பது குறித்து கடிதம் வந்ததை கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தெரி விக்கப்பட்டது என்றும் மூடி மறைக்கவில்லை என்றும் தெரி வித்தார். அமைச்சரின் இந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றும் இதனைக் கண்டித்து வெளி நடப்பு செய்வதாக ஸ்டா லின் கூறினார். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ்
நீட் தேர்வை கொண்டு வந்தது மத்திய காங்கிரஸ் அரசு
தான் என்றும் தமிழக அரசின் உணர்வை மதிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது என்றும் சுகாதாரத்துறை அமைச்
சர் குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி,“ நீட் தேர்வை
விரும்பும் மாநிலங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளலாம் என்றுதான் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தமிழகத்தின் மீது திணிக்கவில்லை என்றார்.
மீண்டும் குறுக்கிட்ட அமைச்ச
ரும் முதலமைச்சரும்,“ உச்ச
நீதிமன்றத்தில் நடந்த வழக்கில்
தமிழகத்தை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி
தான் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்கு எதிராக வாதாடி அந்த
வழக்கில் வெற்றிபெற்றார் என்றார்.
இந்த அவையில் இல்லாத ஒரு
வரின் பெயரை சொல்வது மரபு
அல்ல என்றும் இது குறித்து
விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பு கொடுக்காததால் காங்கிரஸ் கட்சி உறுப்பி னர்களும் வெளிநடப்பு செய்த னர்.