எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்யா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த இலக்கியவாதிகளுக்கு சாகித்ய அகாடமி, பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான பால சாகித்யா புரஸ்கார் விருது, "ஒற்றைச் சிறகு ஓவியா" என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.