வேலூர் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா காட்பாடி சில்க் மில் பேருந்து நிறுத்தம் அருகே மாவட்டத் தலைவர் கேசவன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எம்பி.ராமச்சந்திரன் பெயர்பலகை திறந்து வைத்து கொடி ஏற்றினார். புதிய நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டையை மாவட்டச் செயலாளர் பிரபாகரன் வழங்கினார்.இதில் மாவட்டப் பொருளாளர் எஸ்.பரசுராமன், ராமன் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.