திருவள்ளூர், ஜூன் 29- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சி சுற்று வட்டார பகுதிகளில் நாள்தோறும் இரவு நேரங் களில் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை அறிவிக் கப்படாத மின் வெட்டு நடை முறையில் உள்ளது. இந்த நிலையில், வெள்ளியன்று இரவு பதி னோரு மணிக்கு ஏற்பட்ட மின்வெட்டு அதிகாலை 4 மணி வரை வரவில்லை. இது குறித்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அதிகாரிகள் முறையான பதில் கூறாத தால் ஆத்திரமடைந்த பொது மக்கள் திருவேங்கட புரத்தில் உள்ள மின்வாரிய அலுவல கம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து மீண்டும் மின் சாரம் வந்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.